கேரள காங்கிரஸ் தலைவராக கே. சுதாகரன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதாகரன் தவிர்த்து கே. சுரேஷ், பி.டி. தாமஸ் மற்றும் டி. சித்திக் ஆகியோர் கேரள காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் சுதாகரன் கூறியது:
"இதை நான் பெரிய பொறுப்பாகப் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியைப் பெரிதளவில் மீட்டெடுக்கும் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு கட்சியின் அனைத்துத் தலைவர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்பைக் கோருவேன். நிச்சயம் அவர்களது உதவி மற்றும் ஆதரவைப் பெறுவேன்."
சுதாகரன் 4 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது கண்ணூர் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.