மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா பரவல் குறையாததால், மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறையாததால், ஜூன் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி முதல்வர் செளஹான் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில், ஊரடங்கில் ஏழை மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.