நடப்பாண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிவித்தார்.
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.