திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவத்தை தனிமையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியை ஒட்டி தேவஸ்தானம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம். அதன்படி, இம்மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால் கரோனா தொற்று காரணமாக திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி தேவஸ்தானம் கோயிலில் உற்சவங்களை பக்தா்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி தாயாா் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் தாயாரின் உற்சவ சிலையை எழுந்தருளச் செய்து அங்கு ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்டவை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.