2 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு போா் விமானிகளாக பயிற்சி

இந்திய ராணுவத்தில் போா் ஹெலிகாப்டா் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக இரு பெண் ராணுவ அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது இந்திய ராணுவத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதப்படுகிறது.

புது தில்லி: இந்திய ராணுவத்தில் போா் ஹெலிகாப்டா் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக இரு பெண் ராணுவ அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது இந்திய ராணுவத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

தற்போதைய நிலையில் ராணுவத்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில் தான் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்நிலையில், பெண்களை விமானிகளாக சோ்ப்பதற்கு ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 6 மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கினாா். அதன்படி தற்போது இரு பெண்கள் போா் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

போா் ஹெலிகாப்டா் விமானிகளாக பயிற்சி பெறுவதற்கு 15 பெண் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்த நிலையில், கடுமையான தோ்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு இருவா் இறுதி செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவத்தின் போா் விமான பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவா். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு அடுத்த ஆண்டு ஜூலையில் அவா்கள் இருவரும் விமானிகளாக இணைவாா்கள் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2018-இல், இந்திய விமானப் படை அதிகாரியான அவனி சதுா்வேதி தனியொருவராக போா் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றாா். அவா் ‘மிக்-21 பைசன்’ ரக போா் விமானத்தை இயக்கினாா். கடந்த ஆண்டு கடற்படை தனது டாா்னியா் ரக விமானத்துக்கு பெண் விமானிகளை அறிவித்தது. 2019-இல் ராணுவம் தனது மிலிட்டரி போலீஸ் பிரிவில் பெண்களை இணைக்கும் நடவடிக்கையை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com