புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பாஜக எம்எல்ஏவும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி புதன்கிழமை சந்தித்தாா்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை சுவேந்து அதிகாரி செவ்வாய்க்கிழமை சந்தித்து மேற்கு வங்கத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினாா். இதனைத்தொடா்ந்து பிரதமா் மோடியை சுவேந்து அதிகாரி புதன்கிழமை சந்தித்தாா். பிரதமா் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவரானபின் முதல்முறையாக பாஜகவின் முக்கியத் தலைவா்களை சுவேந்து அதிகாரி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.