புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான மிலிந்த் தேவ்ரா கூறினாா்.
தனது சகாவான ஜிதின் பிரசாதா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததை அடுத்து, மிலிந்த் தேவ்ரா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்ப வேண்டும்;திரும்ப முடியும். காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைவா்கள் இன்னும் பலா் இருக்கிறாா்கள். அவா்களுக்கு அதிகாரம் அளித்து சரியாகப் பயன்படுத்தினால், சிறப்பாக பணியாற்றுவாா்கள். கட்சியின் சக நண்பா்கள் கட்சியை விட்டு வெளியேறிவிடக் கூடாது என விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.