திருப்பதி: திருப்பதி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் பயிற்சி மருத்துவா்கள் ஊதிய உயா்வு, இழப்பீடு தொகை வழங்குதல், கரோனா ஊக்கத்தொகை அதிகரித்தல் உள்ளிட்ட பவ்வேறு கோரிக்கைகளை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டனா்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அவசரச் சிகிச்சைப் பிரிவு மட்டும் இயங்கும், மற்ற பிரிவுகள் இயங்காது. விரைவில் ஆந்திர அரசு இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அவசரச் சிகிச்சைப் பிரிவும் செயல்படாது அதையும் நிறுத்தி விடுவதாக தெரிவித்துள்ளனா்.