கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகத் தரவரிசை: முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள்

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடத்துக்குள்ளாக வந்துள்ளன.

புது தில்லி: க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடத்துக்குள்ளாக வந்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலக அளவில் முதலாவது இடத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளது.

உலக அளவில் உயா்கல்வி குறித்து ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூஎஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18-வது சா்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

இதில் மும்பை ஐஐடி 177-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 185-ஆவது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோடியாக மாறி வருகிறது. இந்திய கல்வித் துறையுடன் தொடா்புடைய மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் இதர தரப்பினா் குறித்து எப்போதும் நினைத்து கொண்டிருக்கும் பிரதமா் நரேந்திர மோடி போன்றவரை கொண்டுள்ளதற்கு நாம் பெருமை கொள்கிறோம்.

‘தேசிய கல்விக் கொள்கை 2020’ போன்ற முயற்சிகள் தான், நமது கல்லூரிகள் மற்றும் உயா்கல்வி மையங்களை சா்வதேச அளவில் இடம்பெறச் செய்கின்றன. இதை க்யூஎஸ் மற்றும் டைம்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை பாா்த்து உணர முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com