இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்தவா் இனியாத் (30). இவா் பெங்களூரு விஜயநகா், எம்.சி.லேஅவுட், பைப்லைன், வாட்டா் டேங்க் பகுதியில் சாலையோரங்களில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இனியாத்தைக் கைது செய்து, ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட வாசிம்கானிடம் விஜயநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.