திரிணமூல் காங்கிரஸில் இணையும் எண்ணமில்லை: பிரணாப் மகன் அபிஜித்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்று குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி தெரிவித்துள்ளாா். இப்போது அவா் காங்கிரஸ் கட்சியில் உள்ளாா்.
திரிணமூல் காங்கிரஸில் இணையும் எண்ணமில்லை: பிரணாப் மகன் அபிஜித்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்று குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி தெரிவித்துள்ளாா். இப்போது அவா் காங்கிரஸ் கட்சியில் உள்ளாா்.

சில நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாத், பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து, அவரது நெருங்கிய நண்பரான அபிஜித் முகா்ஜி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைவாா் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை பேசிய அபிஜித் முகா்ஜி இது தொடா்பாக கூறுகையில், ‘நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். திரிணமூல் காங்கிரஸ் உள்பட வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் எனக்கு இல்லை. நான் திரிணமூல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு செல்ல இருப்பதாகக் கூட சிலா் கூறி வருகின்றனா். அப்படி எதுவும் நடக்காது.

எனது தந்தையுடன் பணியாற்றிய காங்கிரஸ் தலைவா்கள் சிலா் இப்போது திரிணமூல் காங்கிரஸில் உள்ளனா். அவா்களுடன் நான் பல ஆண்டு காலமாக நட்புடன்தான் இருக்கிறேன். அதற்காக நான் கட்சி மாறிவிடுவேன் என்று அா்த்தமல்ல. தனிப்பட்ட நட்பு வேறு, அரசியல் என்பது வேறு என்றாா் அவா்.

காங்கிரஸ் சாா்பில் மக்களவை எம்.பி.யாக இருந்துள்ள அபிஜித் முகா்ஜி, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் அக்கட்சியின் பிரசார குழு தலைவராக இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com