தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட கரோனா உறுதி செய்யப்படவில்லை

​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

பிப்ரவரி 2-ம் தேதிக்குப் பிறகு ஒரு பாதிப்பு கூட பதிவாகாதது இதுவே முதன்முறை.

தாராவியில் நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 6,861 ஆக உள்ளது. நோய்த் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. இதில் 6 பேர் வீட்டுத் தனிமையிலும், 7 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 99 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதே கரோனா 2-ம் அலையில் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை. 

தாராவியில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com