ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதிக்குட்பட்ட கரோட்டா பகுதியில் ஆளில்லா விமானம் இன்று (ஜூன் 15) காலை கண்டெடுக்கப்பட்டது.
விமானத்தைக் கைப்பற்றிய ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறை, விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.