இண்டிகோ விமானத்தில் கோளாறு: பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கம்

கண்ணூரில் இருந்து கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்ற விமானம் தரையிறங்கும்போது கோளாறு ஏற்பட்டது. எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கண்ணூரில் இருந்து கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்ற விமானம் தரையிறங்கும்போது கோளாறு ஏற்பட்டது. எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் திங்களன்று கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்றது. திங்களன்று மாலை கர்நாடகத்தின் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. எனினும் பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். 

விமானத்தின் டயர் வெடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், பயணிகள், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானம் தற்போது பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com