கரோனா தொற்று பரவல் காரணமாக மணிப்பூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
எனினும் மாநில நிலைகளுக்கேற்ப தேர்வுகளை ஒத்திவைத்தும், ரத்து செய்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மணிப்பூரில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.