கரோனா தொற்று பரவல் காரணமாக ஹரியாணா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது
இந்நிலையில் ஹரியாணாவில் நிலவி வரும் கரோனா பரவல் சூழல் காரணமாக மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வழக்கமாக, பள்ளிகள் கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், ஏற்கனவே ஜூன் 15 வரை கோடைக்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.