புது தில்லி: கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க ஏதுவாக ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்கவிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதனை சமாளிக்க வசதியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஜூன் 28-ஆம் தேதி முதல் இந்த பயிற்சி தொடங்கவிருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்க இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர்காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் இளைஞர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி நாள்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஜூன் 17 முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.