அம்பானி வீட்டருகே வெடிபொருள்: என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்ற முன்னாள் அதிகாரி கைது

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டடிருந்த விவகாரத்தில் முன்னாள் காவலர் பிரதீப் ஷர்மா மும்பையில் கைது செய்யப்பட்டார். 
அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருள்: என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்றவர் கைது
அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருள்: என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்றவர் கைது


 
மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டடிருந்த விவகாரத்தில் முன்னாள் காவலர் பிரதீப் ஷர்மா மும்பையில் கைது செய்யப்பட்டார். 

என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான பிரதீப் ஷர்மா, மும்பை அருகே லோனாவ்லா என்ற பகுதியில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேபி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில், இந்த வழக்கில் தொடர்புடைய சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்வதற்கு முன்பு, பிரதீப் ஷர்மாவிடம் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் நிறைவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே, இந்த வழக்கில் பிரதீப் ஷர்மாவிடம்  இரண்டு நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கைதாகும் காவல்துறையைச் சேர்ந்த ஐந்தாவது நபர் இவர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை கைதானவர்களில் எட்டாவது நபராக இவர் உள்ளார்.

முன்னதாக, இதே வழக்கில் மேலும் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்திருந்தது.

இவ்விரு கைது சம்பவம் தொடா்பாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சந்தோஷ் ஷெலாா், ஆனந்த் ஜாதவ் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி மலாட் என்ற இடத்தின் புகா் பகுதியில் கைது செய்யப்பட்டனா். அவா்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய நிலையில், விசாரணைக்காக 21-ஆம் தேதி வரை அவா்களுக்கு என்ஐஏ போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது எதிா்பாராத திருப்பமாக இவா்கள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவா்கள் இருவரும் முன் திட்டமில்லாத வகையில் கைது செய்யப்பட்டனா். அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருள்களுடன் காா் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தில் அவா்களுக்கு தொடா்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், தொழிலதிபா் மன்சுக் ஹிரேன் கொல்லப்பட்ட விவகாரத்திலும் இவா்களுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அறிய முயற்சித்து வருகிறோம். அந்த இருவரில் சந்தோஷ் ஷெலாா், குடிசைப் பகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் திட்டங்களில் மலாட் பகுதியில் பணியாற்றி வந்துள்ளாா். 

மும்பை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்ற பிரதீப் ஷர்மாவுடன் அவருக்கு தொடா்பு இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்போது அவா் அந்த அதிகாரியின் பெயரை உரக்கக் கத்தினாா்’ என்றாா்.

தெற்கு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டருகே கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காா் ஒன்று மீட்கப்பட்டது. அதில் வெடிப்பொருள்களுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்தது. அந்தக் காரின் உரிமையாளரான மற்றொரு தொழிலதிபா் மன்சுக் ஹிரேன் மாா்ச் 5-ஆம் தேதி தாணேவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

இந்த இரு விவகாரங்கள் தொடா்பாக விசாரித்து வரும் என்ஐஏ, ஏற்கெனவே காவல்துறையைச் சோ்ந்த 3 அதிகாரிகள், ஒரு காவலா், கிரிக்கெட் சூதாட்ட முகவா் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறது. அவா்களில் காவல்துறை உதவி ஆய்வாளா் சச்சின் வஜே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com