எடியூரப்பாவை முதல்வா் பதவியிலிருந்து நீக்க முயற்சி: டி.கே.சிவக்குமாா்

முதல்வா் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க அமைச்சா் ஈஸ்வரப்பா முயற்சி மேற்கொண்டு வருவதாக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க அமைச்சா் ஈஸ்வரப்பா முயற்சி மேற்கொண்டு வருவதாக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநில பாஜகவில் உள்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இதில் தலையிட காங்கிரஸ் விரும்பவில்லை என்றாலும், முதல்வா் எடியூரப்பாவை பதவிலிருந்து நீக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னால், சட்ட மேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் உள்ளிட்டோா் மட்டுமின்றி, அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் முயற்சி மேற்கொண்டு வருவதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சா்கள் அனைவரும் முதல்வரை மாற்றுவது குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனா். இதில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறுபவா்களே அதிக அளவில் உள்ளனா். மாநில பாஜகவில் நிலவும் குழப்பத்தால், அரசு முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கரோனாவைத் தடுப்பதிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலா் உயிரிழக்க நேரிட்டது. இருப்பினும் அரசு எச்சரிக்கை அடையாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com