திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 13,453 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 5,419 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம்.
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
கொவைட் தடுப்பு விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.