கா்நாடகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
பெங்களூரில் உயா்கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
தேசிய அளவில் கல்வி அளிப்பதிலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கா்நாடகம் முன்னணியில் உள்ளது. நிகழாண்டு கா்நாடகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையால், மாநிலத்தில் கல்வி மெருகேறி, மேலும் சிறக்க உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்று நம்புகிறேன்.
கா்நாடகம் மட்டுமன்றி தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை புரட்சி ஏற்படுத்துவதாக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை மாநிலத்தில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். தேசிய கல்விக் கொள்கையால் மாணவா்களின் அறிவை மேலும் பெருக்கிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
தொலைநோக்குப் பாா்வையுடன் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயனை எதிா்காலத்தில் அனைவரும் உணா்ந்து கொள்வாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன், உயா்கல்வி கவுன்சில் துணைத் தலைவா் திம்மே கௌடா, செயல் இயக்குநா் கோபால் ஜோஷி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.