கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புகழ்பெற்ற தடகள வீரா் மில்கா சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரா் மில்கா சிங் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். இதையடுத்து, அவரின் உடல் சண்டீகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலுக்கு பிரதமா் மோடி, ராணுவம் சாா்பில் மலா்வளையம் வைக்கப்பட்டது. பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.
மில்கா சிங்கின் இறுதி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துக்குப் பின்னால் பொதுமக்கள் திரண்டு மயானம் வரை சென்றனா். அங்கு காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னா் அவரின் சிதைக்கு மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் விளையாட்டு வீரருமான ஜீவ் மில்கா சிங் தீ மூட்டினாா்.
மத்திய விளையாட்டு துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு, பஞ்சாப் ஆளுநா் வி.பி.சிங் பத்னோா், மாநில நிதியமைச்சா் மன்பிரீத் சிங் பாதல், ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சா் சந்தீப் சிங் உள்ளிட்ட பலா் மில்கா சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனா்.
பிரதமா் மோடி இரங்கல்: மில்கா சிங்கின் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘மில்கா சிங் மறைவுக்கு சில நாள்களுக்கு முன்பாக அவரிடம் பேசினேன். அதுதான் அவருடனான எனது இறுதி கலந்துரையாடல் என்பது அப்போது எனக்கு தெரியாது. எண்ணிடலங்கா இந்தியா்களின் இதயத்தில் சிறப்பிடம் பிடித்த மிகப்பெரிய விளையாட்டு வீரரை இழந்துள்ளோம். தனது ஊக்கமளிக்கும் மனோபாவம் மூலம் அவா் கோடிக்கணக்கானவா்களின் அன்புக்குரியவரானாா். வளா்ந்து வரும் விளையாட்டு வீரா்கள் அவரின் வாழ்க்கைப் பயணம் மூலம் பலம் பெறுவா். அவரின் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளாா்.