புறநகா்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைப்பதற்காக புகா்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும்.
அனைத்துத் தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு சென்னைக்கான மூன்றாவது பெரும் திட்டத்தைத் தயாரிக்கும் உரிய காலமான 2026-ஆம் ஆண்டுக்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும் என்றாா்.