தில்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை சான்று இல்லாத பயணியை அனுமதிக்க மறுத்ததால், ரகளையில் ஈடுபட்ட பயணியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தில்லியிலிருந்து மும்பை செல்லும் விஸ்டாரா விமானத்தில் செல்ல காத்திருந்த பயணியிடம் கரோனா பரிசோதனை சான்று இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த பயணி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை கைது செய்த மத்திய தொழிற்படையினர் தில்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நாடு முழுவதும் கரோனா அலை பரவலை தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்வதற்கு கரோனா பரிசோதனை செய்த சான்று கட்டாயமக்கப்பட்டுள்ளது.