புது தில்லி: மருத்துவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "மருத்துவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாரை நினைவுகூர்கிறேன். அவரது உன்னத இலட்சியங்கள், செறிவான எண்ணங்கள், மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும். தேசிய ஒருங்கிணைப்புக்கான அவரது முயற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது"என்று தெரிவித்துள்ளார்.