தாவூத் இப்ராஹிமின் சகோதரா் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரா் இக்பால் கஸ்கா் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாா்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு கடத்தப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் இக்பால் கஸ்கருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தெற்கு மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மும்பை தொடா் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இப்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளாா். அவரது சகோதரா் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், அவா் மும்பையில் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டதால் தப்பியோடிய அவா், கடந்த 2003-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு கடத்தல் வழக்கிலும் அவா் கைது செய்யப்பட்டாா். முன்னதாக, கொலை வழக்கு மற்றும் சட்டவிரோத கட்டுமான வழக்கும் அவா் மீது இருந்தது. ஆனால், 2007-ஆம் ஆண்டு இந்த வழக்குகளில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.