பிகாரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிகாரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மேற்கு சம்பரன் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் 6 பேரும், பாட்னாவில் 2 பேரும், நாலந்தா, மாதேபுரா மற்றும் அவுரங்காபாத் பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.