கரோனா இரண்டாம் அலையில் நாட்டில் இதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் ஏராளம். இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.
கரோனா இரண்டாவது அலையின்போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக தில்லியில் கரோனாவுக்கு 128 மருத்துவர்கள் உயிரிழந்துளளனர். பிகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர், மேற்குவங்கத்தில் 62 பேர், தமிழகத்தில் 51 பேர், ஆந்திரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.