மக்களவை - மாநிலங்களவை தொலைக்காட்சிகள் இணைந்து புதிய சேனல்

மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி இரண்டும் இணைந்து சன்சத் தொலைக்காட்சி என்ற புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களவை - மாநிலங்களவை தொலைக்காட்சிகள் இணைந்து புதிய சேனல்
மக்களவை - மாநிலங்களவை தொலைக்காட்சிகள் இணைந்து புதிய சேனல்


புது தில்லி: மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி இரண்டும் இணைந்து சன்சத் தொலைக்காட்சி என்ற புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிம், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும். அதே வேளையில், இரு அவைகளுன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி ஹிந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com