மத்தியப் பிரதேச எம்.பி. கரோனாவால் பலி

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான் திங்கள்கிழமை காலமானார்.
மத்தியப் பிரதேச எம்.பி. கரோனாவால் பலி
மத்தியப் பிரதேச எம்.பி. கரோனாவால் பலி

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான் திங்கள்கிழமை காலமானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டார். தீவிர பாதிப்புக்குள்ளான நந்த்குமார் சிங் செளகானுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை இரவு செளகான் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com