மேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜகவின் முதல்வர்தான் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா

மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது, பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜக முதல்வர் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா
மேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜக முதல்வர் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா


பெங்களூரு: மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது, பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும், மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது. வரும் மே 3-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல்வர் பதவியில் இருப்பார் என்று சூர்யா கூறியுள்ளார்.

தமிழகத்திலும், பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி மிகச் சிறப்பாகவே உள்ளது. கடந்த கால ஆட்சியை அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோடு  சசிகலாவின் வாழ்த்துகளும் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com