உத்தரகண்ட் மாநிலத்தில் கரும்பு விலையை உயர்த்தக்கோரி காங்கிரஸ் கட்சியினர் பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய பாஜக அரசுடன் இணைந்து மாநில பாஜக அரசும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.