ரூ.12 கோடி மதிப்பிலான வீடு, கடைகள் உள்ளிட்ட சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை (மாா்ச் 8) விசாரணைக்கு வருகிறது.
இது தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. ஹஸ்னானி மசூத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடைபெற்ாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இது தொடா்பாகக் கடந்த டிசம்பா் மாதம் அவருக்குச் சொந்தமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள வீடு, கடைகள் என ரூ.11.86 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
முறைகேடு நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டும் காலத்துக்கு முன்பே, இந்தச் சொத்துகள் ஃபரூக் அப்துல்லாவிடம் உள்ளன. எனவே, இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா சாா்பில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது என்றாா்.