சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு
சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாள்களுக்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்கப்போகிறேன். 

மேலும், கடந்த சில நாள்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். 

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

சத்தீஸ்கரில் 2,820 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,07,642 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நோய் காரணமாக இதுவரை 3,858 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com