காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ ராஜிநாமா

காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ ராஜிநாமா

4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தார்.


4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், கட்சியில் நீடிப்பது கடினமானது என சாக்கோ குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தில்லியில் சாக்கோ கூறியது:

"காங்கிரஸில் தற்போது ஜனநாயகம் இல்லை. மாநில காங்கிரஸ் குழுவுடன் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. எனது ராஜிநாமாவை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன். 

காங்கிரஸ் தலைவராக இருப்பது கடினமானது. காங்கிரஸில் ஏதேனும் ஒரு அணியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே கட்சியில் நீடிக்க முடியும். காரணம் கட்சித் தலைமை சொல்லிக்கொள்ளும்படியளவில் செயல்பாட்டில் இல்லை.

உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா இடையே கேரள காங்கிரஸ் பிரிந்து கிடக்கிறது. நீண்ட நாள்களாக இதுகுறித்து சிந்தித்து வருகிறேன். கேரளத்தில் காங்கிரஸே இல்லை. காங்கிரஸ் 'ஐ', காங்கிரஸ் 'ஏ' என இரண்டு உள்ளது.

அணி சேர்ப்பதுதான் கேரள காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய சாபம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com