5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 105 நாள்களாக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இவற்றிற்கென விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவர் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.