ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக மே 17-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று உத்தரகண்ட் மேலாண்மை வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தேவஸ்தான வாரியத்தின் படி,
உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு மாற்றப்பட்ட சிவன் சிலை மே 14 அன்று கேதார்நாத்தில் மீண்டும் நிறுவப்பட்டு மே 17-ஆம் தேதி அதிகாலை 5.00 மணி கோயில் நடை திறக்கப்படுகிறது.
குளிர்காலத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.