புது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 24,882 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 24,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,13,33,728-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 140 போ் உயிரிழந்தனா்.
இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,58,446 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,09,73,260 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 2,02,022 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி, வெள்ளிக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 22 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரத்து 273 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மட்டும் 8,40,635 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் 96.86 ஆக அதிகரித்துள்ளது, சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.74 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.40 ஆகவும் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் 2 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.