மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 16,620 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,620 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,14,413ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 50 பேர் பலியானார்கள். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 52,861ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,26,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவிலிருந்து இன்று 8,861 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 21,34,072ஆக உயர்ந்துள்ளது. 5,83,713 வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.