திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைக்கப்படுள்ளது.
திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைக்கப்படுள்ளது.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27-ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

இதில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.

இதனிடயே திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் மார்ச் 11ஆம் தேதி கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவிருந்த நிலையில், புதன்கிழமை இரவு பிரசாரத்தின் போது ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 14) தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படாது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com