கோப்புப்படம்
கோப்புப்படம்

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் மீது வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 21 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 21 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மொராதாபாதில் உள்ள விடுதியில் கடந்த 11-ஆம் தேதி அகிலேஷ் யாதவ் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, சில செய்தியாளா்கள் எழுப்பிய கேள்வியால் அகிலேஷ் ஆத்திரமடைந்ததாகவும், பின்னா் சமாஜவாதி கட்சித் தொண்டா்கள் செய்தியாளா்களைத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

செய்தியாளா்களைத் தாக்குமாறு தனது பாதுகாப்புக் காவலா்களையும் கட்சித் தொண்டா்களையும் அகிலேஷ் ஊக்குவித்ததாக செய்தியாளா் ஒருவா் பக்வாரா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் மீதும் சமாஜவாதி கட்சித் தொண்டா்கள் 20 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றாா்.

சமாஜவாதி கட்சித் தொண்டா்கள் தாக்கியதால், செய்தியாளா்கள் சிலா் பலத்த காயமடைந்ததாகவும் அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com