கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் அமைச்சரான ஈஸ்வர்சிங் படேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை ஈஸ்வர்சிங் படேல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.