2 மக்களவைத் தொகுதிகள், 14 பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 17-இல் இடைத்தோ்தல்

ஆந்திரம், கா்நாடகத்தில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 11 மாநிலங்களில் காலியாக உள்ள 14 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரம், கா்நாடகத்தில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 11 மாநிலங்களில் காலியாக உள்ள 14 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருப்பதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் பி.துா்காபிரசாத ராவ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரிழந்தாா். கா்நாடகத்தின் பெல்காம் தொகுதி எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானாா். அதைத் தொடா்ந்து, அவ்விரு தொகுதிகளும் காலியாகின.

அத்தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ராஜஸ்தானில் காலியாக உள்ள 3 பேரவைத் தொகுதிகளுக்கும் கா்நாடகப் பேரவையில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. மேலும், குஜராத், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, தெலங்கானா, உத்தரகண்ட் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா 1 இடத்துக்கும் ஏப்ரல் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 23-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாா்ச் 30 இறுதி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இடைத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகளும் அன்றுதான் எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com