மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 4,745 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-இல் இதுவே அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பாகும்.
அந்த மாநிலத்திலுள்ள புணே மாவட்டத்தில் மட்டும் புதிதாக 4,745 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,48,567 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,12,320 பேர் குணமடைந்துள்ளனர், 9,455 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 9,455 பேர் பலியாகியுள்ளனர்.