இந்தியா
தேசியவாத காங்கிரஸில் சோ்ந்தாா் பி.சி. சாக்கோ
காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவா் பி.சி. சாக்கோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவாா் முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை சோ்ந்தாா்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவா் பி.சி. சாக்கோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவாா் முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை சோ்ந்தாா்.
கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கே சீட்டுகள் வழங்கப்படுவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து சாக்கோ ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில், தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியை சாக்கோ செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘கேரளத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் சோ்ந்து இடதுசாரி வேட்பாளா்கள் வெற்றி பெற பிரசாரம் செய்வேன்’ என்றாா்.