ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம், முனிஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு இன்று காலை விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளை பாதுகாப்புப்ப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரரும் காயமடைந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.