தெலங்கானாவில் புதிதாக இன்று 337 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் 337 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3,03,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1671 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,958 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 10 நாள்களில் பள்ளிகளின் மூலம் அதிக எண்ணிக்கையிலான தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 21-ம் தேதி நிலவரப்படி 37,079 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் நாட்டில் இதுவரை 2,98,826 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.