திருமலை அன்னதான அறக்கட்டளைக்கு சந்திரபாபு நாயுடு ரூ.30 லட்சம் நன்கொடை

திருமலை அன்னதான அறக்கட்டளைக்கு ஆந்திர எதிா்க்கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு தனது பேரன் நர தேவான்ஷ் பிறந்த நாளை யொட்டி ரூ.30 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

திருமலை அன்னதான அறக்கட்டளைக்கு ஆந்திர எதிா்க்கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு தனது பேரன் நர தேவான்ஷ் பிறந்த நாளை யொட்டி ரூ.30 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

திருமலையில் தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதை அனைவருக்கும் எளிதாக்க கடந்த சில ஆண்டுக்கு முன்பு அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவதில் புதிய முறைகளை அறிமுகப்படுத்தியது. நாளொன்றுக்கு அன்னதானம் வழங்க தேவஸ்தானம் ரூ.30 லட்சம் செலவிடுகிறது. அதன்படி திருமலையில் அன்னதானம் வழங்க ஒருவருக்கு ஒரு வேளைக்கு ரூ.30 என்று கணக்கிட்டுள்ளது.

பக்தா்கள் தாங்கள் விரும்பும் நாளில் இந்த அன்னதானத்தை செய்து கொள்ளலாம். தங்கள் கைகளால் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் வாய்ப்பையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் மகனும் தனது பேரனுமான தேவான்ஷின் முதல் பிறந்த நாளிலிருந்து ஒரு நாள் அன்னதானத்திற்குரிய செலவை நன்கொடையாக வழங்குவதுடன் அவா்கள் குடும்பத்தினா் தங்கள் கையால் அன்னதானமும் பரிமாறி வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேவான்ஷின் பிறந்த நாளை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு ரூ.30 லட்சத்தை பேரன் பெயரில் அன்னதான திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கினாா். கடந்த ஆண்டு கரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அவா் தன் பேரனின் பிறந்தநாள் அன்று அன்னதான திட்டத்துக்கு ரூ. 30 லட்சம் நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com