மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கரோனா

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு (58) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு (58) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 19-ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஓம் பிா்லாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் 20-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது. தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா். உரிய மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால், கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com