யூனியன் பிரதேசமான லடாக்கில் செவ்வாய்க்கிழமை காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 11.27 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.